தியாகி திலீபன் நினைவுப் பேச்சுப்போட்டி விபரங்கள்
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு, இளையோர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்குடன் அவுஸ்திரேலியா மாநிலங்கள் தழுவிய பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.
தியாகி திலீபனின் நினைவுநாள் நிகழ்வு, தியாகி திலீபன் உயிர்த்தியாகமடைந்த 23 வருட நினைவுநாளான, எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி நியு சவுத்வேல்ஸ் மாநிலத்திலும், விக்ரோரிய மாநிலத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நினைவு நாளையொட்டி நடைபெறவுள்ள பேச்சுப்போட்டியில் பங்குகொள்ளவிரும்பும் இளையோர்கள், உங்கள் பெயர் விபரங்களை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் ஊடாக பதிவுசெய்துகொள்ளலாம்.
போட்டியாளர்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றினை தெரிவுசெய்து, தமது பேச்சினை தயார் செய்வதுடன் அப்பேச்சானது 3 – 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாகவும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
1. தமிழ்மொழியும் தமிழர்களும்
2. தியாகி திலீபனின் தியாகம்
3. தாயக மக்களும் எமது பங்களிப்புகளும்
மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்பேச்சுப்போட்டியில் எட்டு அகவைக்கு உட்பட்டோர் கீழ் பிரிவிலும், பன்னிரண்டு அகவைக்கு உட்பட்டோர் மத்திய பிரிவிலும், பதினாறு அகவைக்கு உட்பட்டோர் மேல்பிரிவிலும் பங்குகொள்ளமுடியும்.
உங்கள் பதிவுகளை செப்ரம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்பதாக பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
29 – 07 - 2010
--
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
+61414185348
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






