யாழ்.அபிவிருத்திப் பணி ஒப்பந்தங்கள் திட்டமிட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படுகிறது
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் கட்டிடத்தொழில் உட்பட்ட, தேர்ச்சி பெற்ற தொழில்சார் பணியாளர்கள் இருக்கின்ற போதும், தென்னிலங்கை சிங்களவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளமை, யாழ்ப்பாண மக்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் சம்மேளத்தின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப்பு செயலாளருமான சீ வீ கே சிவஞானம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உள்நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், தமது சொந்த முகவர்களையே பிரதிநிதிகளாக நிறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அவ்வாறு நிறுத்தப்படும் பட்சத்திலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கான தொழில் வாய்ப்புகளும், வருமானம் உழைப்பதற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






